உச்சம் தொட்ட தங்கத்தின் விலை! ஒரே நாளில் இரண்டு முறை விலை அதிகரிப்பு
புதிய இணைப்பு
இலங்கையில் இன்று (27) மாத்திரம் இரண்டாவது தடவையாகவும் தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது.
உலகச் சந்தையில் தங்கத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், அதற்கு நிகராக இலங்கையிலும் தங்கத்தின் விலை உச்சம் தொட்டு வருகின்றது.
இன்று (27) நிலவரப்படி, உலகச் சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,553 அமெரிக்க டொலர்கள் வரை அதிகரித்துள்ளது.
12,000 ரூபாவினால் தங்க விலை
அதன்படி இன்றைய தினம் மாத்திரம் 12,000 ரூபாவினால் தங்க விலை அதிகரித்துள்ளது.

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி, 22 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 340,400 ரூபாவாக அதிகரித்துள்ளது.
இது நேற்றைய தினம் 329,300 ரூபாவாக காணப்பட்டது. அதேநேரம், 24 கரட் ஒரு பவுன் தங்கத்தின் விலை 368,000 ரூபாவாக உயர்ந்துள்ளது.
இது நேற்றைய தினம் 356,000 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
முதல் இணைப்பு
இலங்கையில், கடந்த ஒரு வாரத்தில் மாத்திரம் தங்கத்தின் விலை 22,000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இதன்படி, கடந்த 20 ஆம் திகதி 340,000 ரூபாய்க்கு தங்கம் விற்பனை செய்யப்பட்டது.
6000 ரூபாயால் அதிகரிப்பு
24 கரட் தங்கம் பவுண் ஒன்று இன்றையதினம்(27) 362,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
மேலும், 22 கரட் தங்கம் பவுண் 335,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

நேற்று(26) 356,000 ரூபாயாக விற்பனை செய்யப்பட்ட 24 கரட் தங்கம் பவுண் ஒன்று, இன்றைய நாளில் 362,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
நேற்றைய நாளுடன் ஒப்பிடும் போது இன்று 6000 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
விலை மாற்றம்
தங்கத்தின் விலையில் நேற்றையதினம் (26) பிற்பகல் உயர்வு ஏற்பட்டுள்ளதாக இலங்கை நகைக்கடை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
நேற்று நண்பகல் வரை தங்கத்தின் விலையில் எவ்வித மாற்றமுமின்றி நிலையாகக் காணப்பட்டுள்ளது.

இருப்பினும் பிற்பகலுக்குப் பின் 24 கரட் தங்கம் பவுண் ஒன்றுக்கு 2000 ரூபா அதிகரித்தமை குறிப்பிடத்தக்கது.