வரலாற்றில் இல்லாதளவு மற்றுமொரு விலையும் அதிகரிப்பு
வரலாற்றில் இல்லாத வகையில் வெற்றிலையின் விலை 10 ரூபாவாக அதிகரித்துள்ளதாக நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.
குலயாபிட்டிய, பகமுன, நாவுல போன்ற பகுதிகளில் வெற்றிலை வியாபாரம் பிரதானமாக இடம்பெற்று வரும் நிலையில், விவசாயிகளிடம் இருந்து கொத்தாக ரூ.850க்கு வெற்றிலையினை பெற்று சில்லரை விற்பனை நிலையத்தில் ஒரு இலை ரூ.10க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
ஆரம்பத்தில் வெற்றிலையின் விலை ரூ.2.50 முதல் ரூ.5.00 வரை விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், தற்போது வெற்றிலையின் விலை திடீரென 10 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சந்தையில் பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் உரம் மற்றும் விவசாய இரசாயன தட்டுப்பாடு காரணமாக வெற்றிலைச் செய்கையின் வளர்ச்சியின்மை, எரிபொருள் விலை அதிகரிப்பு என்பனவே விலை அதிகரிப்பிற்கான பிரதான காரணம் என்றும் வியாபாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.





சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

மனோஜை துடைப்பக்கட்டையால் ரவுண்டு கட்டி அடித்த பெண்கள், அப்படி என்ன செய்தார்.. சிறகடிக்க ஆசை கலகலப்பு புரொமோ Cineulagam

ரோபோ ஷங்கர் மறைவு மேடையில் எமோஷ்னலாக பேசிய அவரது மனைவி மற்றும் மகள்.. கண்ணீரில் அரங்கம், வீடியோ Cineulagam

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
