மகாநாயக்க தேரர்களுடன் கலந்துரையாடிய ஜனாதிபதி!
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகா நாயக்க தேரர்களை சந்தித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளார்.
ஆசிர்வாதம்
மகா நாயக்க தேரர்களை நேற்று (21) பிற்பகல் ஜனாதிபதி சந்தித்துள்ளார்.
இதன்போது ஜனாதிபதிக்கும் மகா நாயக்க தேரர்களுக்கும் இடையில் சிறு கலந்துரையாடல்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சந்திப்புகளில் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோனும் கலந்துகொண்டுள்ளார்.
கலந்துரையாடல்
இதற்கமைய முதலில் மல்வத்து மகா விகாரைக்கு சென்ற ஜனாதிபதி, மல்வத்து பீட மகா நாயக்க வண, திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரர் மற்றும் மல்வத்து பீட அனுநாயக்க வண, திம்புல்கும்புரே விமலதம்ம தேரர் ஆகியோரை தரிசித்து ஆசிர்வாதம் பெற்றுக்கொண்டுள்ளதுடன் சிறு கலந்துரையாடலிலும் ஈடுபட்டுள்ளார்.
அதன் பின்னர் அஸ்கிரி பீட மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து சிறிது நேரம் கலந்துரையாடியுள்ளார்.
மேலும் முதியங்கனை ரஜமஹா விகாரையின் விகாராதிபதி வண, முருந்தெணியே தம்மரதன தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் ஜனாதிபதிக்கு பிரித் பாராயணம் செய்து ஆசி வழங்கினார்கள்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 6 மணி நேரம் முன்

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனாவால் இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தியில் கடும் தாக்கம் - Bajaj, Ather, TVS பாதிப்பு News Lankasri
