ரணில் - பசில் இன்று முக்கிய சந்திப்பு: தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்படும் என எதிர்பார்ப்பு
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் ஸ்தாபகர் பசில் ராஜபக்சவுக்கும் இடையிலான தீர்க்கமான சந்திப்பு இன்று (23) செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது எனத் தெரியவருகின்றது.
ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ வதிவிடத்தில் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பின்போது எட்டப்படும் முடிவுகளின் அடிப்படையிலேயே மொட்டுக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்தகட்ட அரசியல் நகர்வுகள் பற்றி முடிவெடுக்கப்படும் எனத் தெரியவருகின்றது.
இதற்கு முன்னரும் ரணிலுக்கும் பசிலுக்கும் இடையில் இரு சந்திப்புகள் நடைபெற்றன.
மூன்றாம் கட்ட சந்திப்பு
இதன்போது ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் நாடாளுமன்றத் தேர்தலைப் பெறும் பசிலின் முயற்சி தோல்வியில் முடிந்தது. அதேபோல் அடுத்த தேர்தல்களைக் கூட்டணியாக எதிர்கொள்வது குறித்தும் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இவ்வாறானதொரு பின்புலத்திலேயே முக்கியமான சில முடிவுகளை எடுக்கும் நோக்கில் மூன்றாம் கட்ட சந்திப்பு இடம்பெறுகின்றது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam
