தேர்தலை ஒத்திவைக்கவில்லை: ஜனாதிபதி திட்டவட்டம்

Palitha Range Bandara Ranil Wickremesinghe Sri Lanka Presidential Election 2024
By Independent Writer May 29, 2024 07:09 AM GMT
Independent Writer

Independent Writer

in அரசியல்
Report
Courtesy: Sanukshan

ஜனாதிபதி தேர்தல் மற்றும் நாடாளுமன்ற தேர்தலை ஒத்திவைக்கும் யோசனை கொண்டு வரப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார தெரிவித்த கருத்தானது சர்ச்சையை தோற்றுவித்திருந்த நிலையில், ஜனாதிபதி இதற்கு பதில் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் உறுப்பினர்களும் இந்த நடவடிக்கையை நிராகரித்துள்ள நிலையில், நேற்று மாலை அரசியல் வட்டாரங்களில் குழப்பம் ஏற்பட்டிருந்தது.

இந்நிலையில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க(Ranil Wickremesinghe), எதிர்க்கட்சி உட்பட பல நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து இந்த அறிக்கையை மேலும் தெளிவுபடுத்துவதற்காக அழைப்புகளைப் பெறத் தொடங்கினார்.

இலங்கையில் வங்கி ஒன்றுக்குள் நடந்த பயங்கரம் : மூன்று நாட்களாக பதுங்கியிருந்த கும்பல்

இலங்கையில் வங்கி ஒன்றுக்குள் நடந்த பயங்கரம் : மூன்று நாட்களாக பதுங்கியிருந்த கும்பல்

ஜனாதிபதி தேர்தல்

இந்த அமைப்புக்களுக்கு பதில் வழங்கிய ஜனாதிபதி தேர்தலை தாமதப்படுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை என்று உறுதியாக தெரிவித்துள்ளார்.

தேர்தலை ஒத்திவைக்கவில்லை: ஜனாதிபதி திட்டவட்டம் | The President Informed That The Election Postponed

ரணிலுக்கு நெருக்கமான ஐ.தே.கவின் மூத்த உறுப்பினர்கள், ஜனாதிபதியின் சார்பில் உழைத்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விடுத்த அறிக்கையை நிராகரிக்குமாறு அழைக்கப்பட்டதோடு, ரங்கே பண்டார ஏன் அவ்வாறான அறிக்கையை வெளியிட்டார் என்பது குறித்து ஐ.தே.க.வுக்குத் தெரியாது என்றும், அவ்வாறான எந்த நடவடிக்கையும் இல்லை எனக் கூறி அதனை கட்சி நிராகரித்ததிருந்தது.

இது ரங்கே பண்டாரவின் தனிப்பட்ட அறிக்கை அன்றி வேறில்லை. இது ஜனாதிபதியின் முடிவு அல்ல என ஐக்கிய தேசியக் கட்சியின் மூத்த உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.

“ஒக்டோபர் மாதம் திட்டமிட்டபடி ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து பொதுத் தேர்தலும் நடத்தப்படும்.

தேசத்தைக் காப்பாற்ற ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக் காலத்தை மேலும் இரண்டு வருடங்களுக்கு நீடிக்க பொது வாக்கெடுப்பை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி பரிந்துரைத்ததாக ரங்கே பண்டார ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் பிற நன்கொடையாளர்களுடன் பொருளாதார சீர்திருத்தங்கள் தொடர்பாக அரசாங்கம் உடன்பாடுகளை எட்டியுள்ளது என்றும், இந்த பயிற்சியை வெற்றியடைய ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிக்க வேண்டியது அவசியமானது.

நள்ளிரவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் - பொலிஸார் வெளியிட்ட தகவல்

நள்ளிரவில் கொடூரமாக கொலை செய்யப்பட்ட பெண் - பொலிஸார் வெளியிட்ட தகவல்

கட்சிகளுக்குள் குழப்பம்

இந்த அறிக்கை வெளியானவுடன், அனைத்து அரசியல் கட்சிகளுக்குள்ளும் குழப்பம் ஏற்பட்டிருந்தது, ரணில் தனது பொதுச் செயலாளர் மூலம் இந்த அறிக்கையை வெளியிட்டாரா என்று கேள்வி எழுப்பப்பட்டது.

தேர்தலை ஒத்திவைக்கவில்லை: ஜனாதிபதி திட்டவட்டம் | The President Informed That The Election Postponed

பொதுமக்களின் எதிர்வினையை சோதிக்கவும், இந்த அறிக்கையை மேலும் தெளிவுபடுத்துவதற்காக அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஜனாதிபதியை அணுகுவதற்கு தீவிரமாக முயன்றுள்ளனர்.

அனைத்து அரசியல் கட்சிகளும் இது நடைமுறைக்கு வந்தால் எதிர்ப்பதாக தெரிவித்த்திருந்நதன.” என கருணாநாயக்க மேலும் கூறியுள்ளார்.

இந்நிலையில் பாலிதவின் கருத்தை ஆதரிக்க போவதில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

அத்தகைய நடவடிக்கைக்கு உடன்படுவதற்கும் மற்றும் ஜனாதிபதி அத்தகைய முடிவை நாட மாட்டார் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டிருந்தார்.

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக போராட்டம்

ஐக்கிய தேசிய கட்சியின் தலைமை காரியாலயத்திற்கு முன்பாக போராட்டம்

தேர்தல்கள் ஆணைக்குழு

மேலும் ஐக்கிய மக்கள் சக்தியும் அதற்கு உடன்படாது என்று ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய மக்கள் சக்தி அதை ஒருபோதும் ஆதரிக்காது. திட்டமிட்டபடி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.

தேர்தலை ஒத்திவைக்கவில்லை: ஜனாதிபதி திட்டவட்டம் | The President Informed That The Election Postponed

இதை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவந்தால் எந்த கட்சியும் அதற்கு வாக்களிக்காது" என்று அவர் கூறியுள்ளார்.

ஒக்டோபர் இரண்டாம் வாரத்தில் ஜனாதிபதித் தேர்தலும், அதனைத் தொடர்ந்து நாடாளுமன்றத் தேர்தலும் நடத்தப்படும் என அரசியல் வட்டாரங்களில் தெரிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தலுக்கான ஏற்பாடுகள் மற்றும் முறையான அறிவிப்பு ஜூலையில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியாகியுள்ள அறிவிப்பு

   நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை கிழக்கு, பரிஸ், France

31 May, 2023
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை கிழக்கு, Neuilly-sur-Marne, France

31 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, செம்மலை, அலம்பில், சென்னை, India

31 May, 2015
மரண அறிவித்தல்

கரம்பொன், Scarborough, Canada

24 May, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, London, United Kingdom

28 May, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வட்டக்கச்சி, பிரான்ஸ், France

29 May, 2014
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வேலணை வடக்கு, Paris, France, Toronto, Canada

25 Apr, 2025
மரண அறிவித்தல்

கட்டுவன், கொழும்பு, London, United Kingdom

17 May, 2025
மரண அறிவித்தல்

வேலணை, யாழ்ப்பாணம், திருகோணமலை

28 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உரும்பிராய் கிழக்கு

30 Apr, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், வண்ணார்பண்ணை, கனடா, Canada

30 May, 2020
மரண அறிவித்தல்

ஏழாலை, கொழும்பு, London, United Kingdom

19 May, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், திருகோணமலை, Toronto, Canada

29 May, 2023
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, வவுனியா, Montreal, Canada

25 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
18ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் களபூமி, ஓட்டுமடம், யாழ்ப்பாணம், Markham, Canada

25 May, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு

25 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Bremen, Germany

21 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

26 May, 2015
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US