காலி முகத்திடல் போராட்டக்களத்தில் விசேட உத்தரவோடு பொலிஸார்(VIDEO)
புதிய இணைப்பு
எதிர்வரும் ஐந்தாம் திகதி, மாலை ஐந்து மணிக்கு முன்னதாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றப்படவேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சற்று முன்னர் குறித்த இடத்திற்கு அதிகளவான பொலிஸார் வருகைத் தந்து விசேட உத்தரவொன்றினை வாசித்து காட்டியிருந்தனர்.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போதே, எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குள் காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் பயிர்செய்கை மேற்கொண்ட இடங்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும் என அறிவித்துள்ளனர்.
மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டக்களத்திற்கு தற்போது பொலிஸார் வருகைத் தந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட உத்தரவு ஒன்றை வாசித்துக் காட்டுவதற்காக பொலிஸார் வந்திருப்பதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
Viral Video: மீனுடன் வானில் பறந்த கழுகு... தட்டிப்பறிக்க வந்த பெலிகான் பறவை! கடைசியில் நடந்தது என்ன? Manithan
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
ஆசிய நாடொன்றில்... கோடீஸ்வரர்கள் குவித்து வைத்திருக்கும் ரூ 12,500 கோடி மதிப்பிலான தங்கம் News Lankasri