காலி முகத்திடல் போராட்டக்களத்தில் விசேட உத்தரவோடு பொலிஸார்(VIDEO)
புதிய இணைப்பு
எதிர்வரும் ஐந்தாம் திகதி, மாலை ஐந்து மணிக்கு முன்னதாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றப்படவேண்டும் என பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சற்று முன்னர் குறித்த இடத்திற்கு அதிகளவான பொலிஸார் வருகைத் தந்து விசேட உத்தரவொன்றினை வாசித்து காட்டியிருந்தனர்.
கொழும்பு கோட்டை பொலிஸ் நிலையத்தினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போதே, எதிர்வரும் ஐந்தாம் திகதிக்குள் காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள கூடாரங்கள் பயிர்செய்கை மேற்கொண்ட இடங்கள் போன்றவற்றை அகற்ற வேண்டும் என அறிவித்துள்ளனர்.
மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
காலி முகத்திடலில் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டக்களத்திற்கு தற்போது பொலிஸார் வருகைத் தந்திருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
விசேட உத்தரவு ஒன்றை வாசித்துக் காட்டுவதற்காக பொலிஸார் வந்திருப்பதாக அப்பகுதியில் இருக்கும் எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
உரிமைகளுக்காக மீண்டும் மீண்டும் போராடும் ஈழத்தமிழர்களின் நிலை.. 12 மணி நேரம் முன்
ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட கம்ருதீன், மகாநதி சீரியலில் இருந்து நீக்கம்? அதிர்ச்சி தகவல் Cineulagam
திட்றவனுக்கும் காசு : திட்டு வாங்குறவனுக்கும் காசு.. பிக்பாஸ் இது தான்! நாஞ்சில் விஜயன் ஓபன் டாக் Manithan
ஜனநாயகன் படத்தின் பட்ஜெட் மற்றும் பிசினஸ் ரிப்போர்ட்.. ரிலீஸுக்கு முன் இவ்வளவு கோடி லாபமா Cineulagam
தொடக்க வீரராக 8, பந்துவீச்சில் 54 ஓட்டங்கள் கொடுத்த அர்ஜுன் டெண்டுல்கர்: நொறுக்கிய ஆஞ்சநேயா News Lankasri