யாழில் இளைஞர் ஒருவருக்கு ஏற்பட்ட பரிதாபநிலை (Video)
இலங்கையில் நாளுக்கு நாள் பல குற்றச்செயல்கள் அதிகரித்து வருகின்றது. இதில் மக்களை மிரட்டி தங்க நகைகளை கொள்ளையடிப்பது, கொடூரமான முறையில் கொலைகள் மற்றும் துஷ்பிரயோகங்கள் சார்ந்த குற்றச்செயல்கள் பல அதிகரிக்கின்றன.
யாழில் இளைஞன் ஒருவரை நிர்வாணமாக ஒளிப்படம் மற்றும் காணொளி எடுத்து கப்பம் கேட்டு மிரட்டியதாக இளம் தம்பதி உள்ளிட்ட நால்வர் கோப்பாய் பொலிஸாரினால் கடந்த சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன், யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியில் வீடுடைத்து 30 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகளைத் திருடிய குற்றச்சாட்டில் பெண் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் கர்ப்பிணி பெண் உட்பட்ட மாற்றுத்திறனாளி ஆகியோர் மீது பொலிஸார் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்ட சம்பவம் ஒன்றும் பதிவாகியுள்ளது.
மேலும், இங்கிரிய, உறுகல பிரதேசத்தில் தனது தந்தையை மோட்டார் சைக்கிளில் பொருத்தப்படிருந்த இரும்பு கம்பியைக்கொண்டு தாக்கி மகள் கொலை செய்துள்ளார்.
இவ்வாறு கடந்த வாரம் நாட்டில் இடம்பெற்ற குற்றச்செயல்கள் தொடர்பாக முழுமையாக தகவல்களை காணொளியில் காணலாம்.
ஈரான் மீதான உக்கிரத் தாக்குதல்... பின்வாங்கிய ட்ரம்பின் முடிவுக்குப் பின்னால்: வெளிவரும் பின்னணி News Lankasri
எங்களுக்கு சாதகமாக தான் நீதிமன்ற உத்தரவு, ரவி மோகன் இவ்வளவு கொடுக்கணும்: ஆர்த்தியின் அம்மா Cineulagam
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri