திடீரென தரையில் விழுந்து நொறுங்கிய விமானம் : செய்திகளின் தொகுப்பு
மலேசியாவில் இராணுவ விமானம் ஒன்று விபத்திற்குள்ளானதில் விமானப்படை அதிகாரி உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ராயல் மலேசிய விமானப்படைக்குச் சொந்தமான ‘ஹவாக் 108’ ரக விமானம் வழக்கமான பயிற்சிக்காக நேற்று முன்தினம் தெற்கு கோலாலம்பூரில் இருந்து புறப்பட்டுச் சென்றது.
விமானப்படைத் தளத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்தில், சற்றும் எதிர்பாராத வகையில், குறித்த விமானம் திடீரென தரையில் விழுந்து நொறுங்கியது.
இவ்விபத்தில், விமானப்படை அதிகாரி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்மொரு விமானப்படை அதிகாரி படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,
you may like this video