சவூதி அரேபியாவில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவிப்பு
சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கையர்களின் நலன் கருதி, கொன்சியுலர் சேவைகளை விரிவுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபிய தூதரகம் அறிக்கை வெளியிட்டு இதனை தெரிவித்துள்ளது.
பொதுமக்களுக்கு தூதரக உதவி
அதற்கமைய வார நாட்களில் தூதரக சேவைகளை பெற்றுக்கொள்ள முடியாதவர்களுக்கு, மாத இறுதியில் வரும் வெள்ளிக்கிழமைகளில் சேவைகளை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய ஏற்பாட்டின் கீழ், ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையன்று பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, பொதுமக்களுக்கு தூதரக உதவியை வழங்குவதற்காக அதிகாரி ஒருவரை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சவூதி அரேபியாவில் வசிக்கும் இலங்கை சமூகத்தினருக்கு அணுகலையும் வசதியையும் மேம்படுத்துவதே இந்த முயற்சியின் நோக்கம் என்று தூதரகம் தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட தூதரக சேவை நேரங்கள்
ஞாயிறு முதல் வியாழன் வரை: காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை.

ஒவ்வொரு மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமை: பிற்பகல் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை.
சிறப்பு வெள்ளிக்கிழமை அமர்வுகளின் போது விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், கூடுதல் செயலாக்க நேரம் தேவைப்படும் சேவைகள் பின்னர் ஒரு திகதியில் வழங்கப்படும் என்றும் தூதரகம் மேலும் கூறியுள்ளது.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
Checkup சென்ற மயிலுக்கு காத்திருந்த இன்ப அதிர்ச்சி, என்ன நடந்தது... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் புரொமோ Cineulagam