அமெரிக்காவில் நடுவானில் பற்றியெரிந்த விமானம்! நால்வர் பலி - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அட்லாண்டா நகரின், சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள, தெகால்ப் - பீச்ட்ரீ விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 210 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், நடுவானில் திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து 15 தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்திற்கான காரணம் பற்றிய தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில், இந்த விபத்துக் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தவுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 7 மணி நேரம் முன்
வெடித்து சிதறிய IRIS Dena கப்பல்! பலத்த பாதுகாப்புடன் சிறப்பு விமானத்தில் ஈரானுக்கு அனுப்பப்பட்ட சடலங்கள்
ஈரான் USS ஆபிரகாம் லிங்கனைத் தாக்கியதா..! குற்றச்சாட்டை மறுக்கும் அமெரிக்கா - அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் போர்களம்