அமெரிக்காவில் நடுவானில் பற்றியெரிந்த விமானம்! நால்வர் பலி - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அட்லாண்டா நகரின், சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள, தெகால்ப் - பீச்ட்ரீ விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 210 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், நடுவானில் திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து 15 தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்திற்கான காரணம் பற்றிய தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில், இந்த விபத்துக் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தவுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,
சர்வதேச அரசியலில் ஆக்கிரமிப்பு யுத்தங்கள் தொடர் கதைதான்... 37 நிமிடங்கள் முன்
இதுவரை பாடல் நிகழ்ச்சிகளில் நடக்காத ஒரு பிரம்மாண்ட பரிசுத் தொகை.... அறிவித்த சரிகமப லில் சாம்ப்ஸ் டீம் Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri