அமெரிக்காவில் நடுவானில் பற்றியெரிந்த விமானம்! நால்வர் பலி - செய்திகளின் தொகுப்பு
அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஏற்பட்ட விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.
அட்லாண்டா நகரின், சாம்பிலீ கவுன்டி பகுதியில் உள்ள, தெகால்ப் - பீச்ட்ரீ விமான நிலையத்தில் இருந்து செஸ்னா 210 ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றுள்ளது.
அந்த விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில், நடுவானில் திடீரென தீப்பிடித்து விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் விமானி உட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து 15 தீயணைப்பு வீரர்கள் சம்பவ பகுதிக்கு சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
விபத்திற்கான காரணம் பற்றிய தகவல்கள் இதுவரை வெளிவராத நிலையில், இந்த விபத்துக் குறித்து தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் விசாரணை நடத்தவுள்ளது.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய செய்திகளின் தொகுப்பு,





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 3 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri
