குழந்தைகளுக்கான வாசனை திரவியத்தை திருடிய நபர் தற்கொலை
ராகமை பிரதேசத்தில் உள்ள சிறப்பு அங்காடிக்கு இன்று காலை சென்ற ஒருவர் பணத்தை செலுத்தாது எடுத்துச் சென்ற சில பொருட்கள் காரணமாக தற்காலை செய்துக்கொண்டுள்ளார்.
குழந்தைக்கு தேவையான வாசனை திரவியங்கள் சிலவற்றை அவர் பணம் செலுத்தாது அங்காடிக்குள் இருந்து எடுத்துச் சென்றுள்ளார்.
அருகில் இருந்த முச்சக்கர வண்டி சாரதி ஒருவர் அந்த நபரை பிடிக்க முயற்சித்த போது, அவர் தனது கையில் இருந்த கத்தியால் சாரதியை குத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளார்.
இந்த சம்பவத்தை பார்த்த மேலும் சிலர் சந்தேக நபரை விரட்டி சென்றுள்ளனர்.
அப்போது எவரையும் அருகில் வர வேண்டாம் எனவும் வந்தால், கழுத்தை அறுத்துக்கொள்வேன் எனக் கூறி, தனது கழுத்தை அறுத்துக்கொண்டுள்ளார்.
பின்னர் அருகில் இருந்த நபர்கள், அவரை ராகமை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் அந்த நபர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காயமடைந்த முச்சக்கர வண்டி சாரதி ராகமை வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். சம்பவம் குறித்து ராகமை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri