கடற்றொழில் விவகாரம்: ஆறு பேருக்கு நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு (Photos)
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் தடை செய்யப்பட்ட இழுவை மடி வலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட ஆறு பேரையும் எதிர்வரும் மே மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பிரதேசத்துக்கு உட்பட்ட கடல் பரப்பில் உள்நாட்டில் தடைசெய்யப்பட்ட இழுவை மடிவலைகளைப் பயன்படுத்தி கடற்றொழிலில் ஈடுபட்ட 06 பேர் நேற்றைய தினம் (18.04.2023) மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு இன்றைய தினம் (19.04.2023) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் நீதிமன்ற நீதிவான் ஜெகநாதன் சுபராஜினி முன்னிலையில் முன்னிலைப்படுத்தியுள்ளனர்.
கடற்றொழில் தொழில் நடவடிக்கை
இதனையடுத்து, குறித்த ஆறு பேரையும் எதிர்வரும் மே மாதம் 02ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
அதாவது யாழ் குடா நீர் பரப்பில் இழுவை மடியுடன் கூடிய வலைகளைப் பயன்படுத்தியமை
உள்நாட்டு நீர் நிலைகளில் பயன்படுத்த முடியாத 85 மில்லி மீட்டருக்கும்
குறைவான அளவுகளைக் கொண்ட வலைகளைப் பயன்படுத்தியமை அனுமதியற்ற கடற்றொழில் தொழில்
நடவடிக்கைகளில் ஈடுபட்டமை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்பில்
முன்னிலைப்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.




Falcon 2000 ஜெட் விமானங்களை இந்தியாவில் தயாரிக்கும் அனில் அம்பானி., பிரெஞ்சு நிறுவனத்துடன் கூட்டணி News Lankasri

விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் பழைய ஹிட் சீரியல்கள்.. எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
