‘‘ஈழத்தமிழர்கள் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இனப்படுகொலை’’ (VIDEO)
2009 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக ஈழத்தமிழ் மக்களை அழித்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை பௌத்த பேரினவாத அரசு முன்னெடுத்து வருவதாக உலக தமிழர் இயக்கத்தின் மக்கள் தொடர்பாளர் நிசா பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வளாகத்தில் தற்போது இடம்பெற்று வரும் 14வது சிறுபான்மை மன்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் வலுக்கட்டாயமாக சிறுபான்மை இனமாக ஆக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இங்கு விவாதிக்கப்படவுள்ளது.
அதாவது,2009 ஆம் ஆண்டில் உச்சக்கட்ட போரின் போது பௌத்த பேரினவாத அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
அன்று தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக தமிழ் மக்களை அழித்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை பௌத்த பேரினவாத அரசு முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 19 மணி நேரம் முன்
அடுத்த டிராமாவை போட்ட குணசேகரன், ஈஸ்வரி கேட்ட கேள்வி, ஷாக்கில் குடும்பம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
கடன் விஷயத்தில் முத்து-மீனா செய்த காரியம், ஷாக்கில் ரவி, ஸ்ருதி... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri