‘‘ஈழத்தமிழர்கள் மீது தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் இனப்படுகொலை’’ (VIDEO)
2009 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை தொடர்ச்சியாக ஈழத்தமிழ் மக்களை அழித்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை பௌத்த பேரினவாத அரசு முன்னெடுத்து வருவதாக உலக தமிழர் இயக்கத்தின் மக்கள் தொடர்பாளர் நிசா பீரிஸ் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை வளாகத்தில் தற்போது இடம்பெற்று வரும் 14வது சிறுபான்மை மன்ற கலந்துரையாடலில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
2009 ஆம் ஆண்டிற்கு பின்னர் ஈழத்தமிழர்கள் வலுக்கட்டாயமாக சிறுபான்மை இனமாக ஆக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இங்கு விவாதிக்கப்படவுள்ளது.
அதாவது,2009 ஆம் ஆண்டில் உச்சக்கட்ட போரின் போது பௌத்த பேரினவாத அரசாங்கத்தினால் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக சிறுபான்மை மக்களாக ஆக்கப்பட்டுள்ளனர்.
அன்று தொடக்கம் இன்று வரை தொடர்ச்சியாக தமிழ் மக்களை அழித்து கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலையை பௌத்த பேரினவாத அரசு முன்னெடுத்து வருகின்றதாகவும் தெரிவித்துள்ளார்.
ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
இந்தியாவிற்கு புறப்படவிருந்த ஈரானிய சரக்கு விமானம் மீது வான்வழித் தாக்குதல் நடத்திய அமெரிக்கா News Lankasri
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri