கோவிட் மரணங்களின் எண்ணிக்கை சடுதியாக உயர்வு
நாட்டில் நேற்றைய தினம் கோவிட் தொற்றால் 63 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் பதிவான கோவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 4,258 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று மாத்திரம் 1919 பேர் கோவிட் தொற்றாளிகளாக கண்டறியப்பட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டில் கோவிட் தொற்றாளிகளின் மொத்த எண்ணிக்கை 301832 ஆக அதிகரித்துள்ளது.
25782 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். 271855 பேர் தொற்றில் இருந்து இதுவரை குணமாகியுள்ளனர்.