இலங்கைக்கு சர்வதேசத்தின் அடுத்த கிடுகுப்பிடி
கடந்தகாலங்களில் இதே அரசாங்கம் வழங்கிய எந்த உத்தரவாதங்களையும் நிறைவேற்றவில்லை என டெலோவினுடைய உத்தியோகபூர்வ ஊடக பேச்சாளரும் சர்வதேச தொடர்பாளருமான குருசாமி சுரேந்தர் தெரிவித்துள்ளார்.
ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களிலும் இதே அரசாங்கம் இதே விடயங்கள் சர்வதேச அரங்கிலே கொண்டுவரப்பட்ட பிரேரணைகளிலிருந்து இலங்கை அரசாங்கம் வெளியேறிக்கொண்டு தங்கள் பல விடயங்களை நிறைவேற்றுவதாக வழங்கிய உத்தரவாதங்கள் எதையுமே அவர்கள் நிறைவேற்றவில்லை.
இது வழக்கமாக இந்த அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற ஒரு தந்திரோபாய நடவடிக்கையாகவே நாங்கள் பார்க்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.