யாழில் சிசுவை உயிருடன் புதைத்த தாய் தொடர்பில் வெளியான தகவல்
யாழ்ப்பாணம் – மட்டுவில் வடக்கு பகுதியில் பிறந்து ஒரு நாளேயான சிசுவை உயிருடன் புதைத்த சிசுவின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிசுவின் தாய் கோவிட் தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அவரை சாவகச்சேரி நீதவான் முன்னிலையில் நாளை (03) ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மட்டுவில் வடக்கு பகுதியில் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பிரசவத்திற்கு பின்னர், வீட்டின் பின்புறத்தில் சிசு புதைக்கப்பட்டதாக பொலிஸாருக்கு வழங்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய சிசு பாதுகாப்பாக மீட்கப்பட்டிருந்தது.
இவ்வாறு மீட்கப்பட்ட சிசு, யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில்,சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





இதய நோய் ஆபத்தை தடுக்கணுமா? அப்போ இந்த 3 உணவுகளை சாப்பிடாதீங்க... எச்சரிக்கும் இதய நிபுணர்! Manithan

தர்ஷன் திருமணத்தை முடித்த ஜனனி-சக்தி எடுத்த அடுத்த அதிரடி முடிவு... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
