இணையம் மூலம் விற்கப்பட்ட சிறுமி விவகாரம்! பொலிஸார் வெளியிட்ட தகவல்
கொழும்பு - கல்கிஸ்ஸையில் 15 அகவை சிறுமியை இணையம் மூலம் விளம்பரப்படுத்தி பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டமை தொடர்பான விசாரணைகள் தொடர்வதாக காவல்துறை அறிவித்துள்ளது.
இந்த விசாரணைகள் மூடி மறைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில்,சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
களுத்துறையைச் சேர்ந்த 42 அகவைக்கொண்ட கட்டிட ஒப்பந்ததாரர் மற்றும் மொரட்டுவையில் ஒரு கையடக்க தொலைபேசியாக உரிமையாளர் ஆகியோர் நேற்று கைது செய்யப்பட்டதாக காவல்துறையின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 43 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஜூன் 7 ஆம் திகதியன்று 35 அகவைக்கொண்ட ஒருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து காவல்துறையினர் இந்த தொடர்பில் விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் ஜூன் 7 முதல், சிறுமியின் தாய், மிஹிந்தலை பிரதேச சபையின் துணைத் தலைவர், மாலத்தீவின் முன்னாள் இராஜாங்க அமைச்சர், மாணிக்க வியாபாரிகள், இலங்கை கடற்படை மருத்துவமனையின் இருதயநோய் நிபுணர், ஒரு காவல்துறை அதிகாரி உட்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.