ஏறாவூரில் சிறுமிக்குச் சூடு வைத்த சிறிய தந்தைக்கு விளக்கமறியல்
ஏறாவூர் பொலிஸ் பிரிவு மிச்நகர் கிராமத்தில் தனது மனைவியின் முதல் கணவரது 6 வயதான பெண் குழந்தைக்கு சூடு வைத்த குற்றச்சாட்டில் அப்பெண்ணின் 25 வயதான இரண்டாவது கணவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறுமியின் முகத்தில் கரண்டியை சூடேற்றி சூடு வைத்த அடையாளங்கள் இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்த போது பெப்ரவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பொலிஸாரால் மீட்கப்பட்ட சூடு வைக்கப்பட்டதாகக் கருதப்படும் சிறுமி தற்போது மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக ஏறாவூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அகிலம் போற்றும் பாரதம், விஜய் டிவியில் மீண்டும் ஒளிபரப்பாக போகும் மகாபாரதம்... வெளிவந்த விவரம் Cineulagam
வானதியை திருமணம் செய்துகொள்ள தயங்கும் பாண்டியன்.. நிலா தான் காரணமா.. அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam
பிரித்தானியாவில் ஆண்டுக்கு 1 மில்லியன் பவுண்டுகள் சம்பாதிக்கும் ஒருவர் எவ்வளவு வரி செலுத்த வேண்டும்? News Lankasri