கிளிநொச்சி பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் பொலிஸாரால் முற்றுகை
கிளிநொச்சி - இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுடலைக்குளம் பகுதியில் சட்டவிரோதமான முறையில் நடாத்தப்பட்டு வந்த கசிப்பு உற்பத்தி நிலையத்திற்கு பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் சட்டவிரோதமான முறையில் கசிப்பு உற்பத்தி நடைபெறுவதாக இராமநாதபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைய இன்றைய தினம் (17.10.2023) சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரின் நடவடிக்கை
இதன்போது, 18,750 லீட்டர் கோடாவும், 80 லீட்டர் கசிப்பும், கசிப்பு உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட சந்தேக நபர்கள் பொலிஸாரை கண்டவுடன் அங்கிருந்து தப்பி சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் தப்பிச்சென்ற சந்தேகநபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இராமநாதபுரம் பொலிஸார் தொடர்ச்சியாக மேற்கொண்டு வருவதாகவும், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படுக்கையில் நெப்போலியன் மகன்... எலும்பும் தோலுமாக மாறியதற்கு என்ன காரணம்? நேரில் சந்தித்த பிரபலம் Manithan
