தண்டனையை ஏற்று மணல் மூட்டைகளை சுமந்த மன்னன்-வரலாற்றை நினைவூட்டிய கிரியெல்ல
மன்னன் நரேந்திர சிங்கன் அன்று நாட்டின் சட்டத்தை மதித்து 25 மணல் மூட்டைகளை சுமந்துக்கொண்டு பத்தினியம்மன்(கண்ணகியம்மன்) கோயிலுக்கு சென்றதாகவும் எனினும் நாட்டின் தற்போதைய ஜனாதிபதி பதவி நாட்டின் சட்டத்திற்கு அடிப்பணிவதில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
நாட்டின் சட்டத்தை மீறிய மன்னன்

வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாவது முறை வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
மன்னன் நரேந்திர சிங்கன் மேல் நாட்டு சட்டத்தை மீறியுள்ளதாக அரச சபை தீர்மானித்த போது, தண்டனையை ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பதாக நரேந்திர சிங்கன் கூறினார்.
பத்தினியம்மன் கோயிலை புனரமைப்பதற்கு தேவையான 25 மூட்டை மணலை தோளில் சுமந்து செல்லுமாறு அரச சபை, மன்னருக்கு அறிவித்தது. அரச சபையின் அந்த தண்டனை ஏற்றுக்கொண்டு மன்னர் மணல் மூட்டைகளை தோளில் சுமந்து சென்றார்.
நாட்டின் தலைவர் சட்டத்திற்கு உட்பட்டவர் அல்ல

இதனடிப்படையில் அந்த காலத்தில் மன்னரை கூட தண்டிக்கும் சட்டம் நாட்டில் இருந்த போதிலும் தற்போது நாட்டின் தலைவர் சட்டத்திற்கு உட்பட்டவர் அல்ல எனவும் நாட்டின் ஜனாதிபதிக்கு எதிராக வழக்கு தொடர முடியாது எனவும் கிரியெல்ல மேலும் தெரிவித்துள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
கடைசி நேரத்தில் தப்பிய பிரபலம்.. பலிகாடான சீரியல் நடிகர்- அடுத்து வெளியேறுபவர் யார் தெரியுமா? Manithan
பழனிவேலா இது, இப்படியொரு காரியத்தை செய்துவிட்டார், பாண்டியன் என்ன செய்வார்... பாண்டியன் ஸ்டோர்ஸ் அடுத்த கதைக்களம் Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam