தமிழர் பகுதியை விட்டுச்சென்ற சர்வதேச மைதானம்!
இலங்கை கிரிக்கெட் சபையின் பல கோடி நிதியில் அமைக்கப்படும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் வவுனியா ஈரப்பெரியகுளத்தில் அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச மைதானம்
வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் உள்ள விவசாய பண்ணைக்கு சொந்தமான பயன்படுத்தப்படாத பகுதியை மைதானத்திற்கு வழங்குமாறு வவுனியா துடுப்பாட்ட சங்கம் வலியுறுத்திய நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களுக்கும் எழுத்து மூலம் கடிதம் வழங்கப்பட்டிருந்தது.

பொறுப்பானவர்களின் கவனயீனம்
எனினும் இது தொடர்பில் அவர்களும் நடவடிக்கை எடுக்காத நிலையில் தற்போது வவுனியா தெற்கு சிங்கள பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஈரப்பெரியகுளத்தில் பிரதேச செயலகத்தில் காணி ஒதுக்கப்பட்டு மைதானம் அமைப்பதற்கான பணிகள் இடம்பெற்று வருகின்றது.

இதைவேளை ஓமந்தையில் காணி ஒதுக்கீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்ட போதிலும் இது
தொடர்பில் சம்பந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்காத நிலையும் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
காந்திமதியை வீட்டிற்கு அழைத்த முத்துவேல், நடந்தது என்ன?... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
விஜய்யை நேரில் பார்த்ததும் காவேரி செய்த செயல், சாரதாவிற்கு தெரிந்த உண்மை... மகாநதி சீரியல் Cineulagam
ஏழு மாதங்கள் மகா பெரிய போர்... அச்சத்தை உருவாக்கியுள்ள பிரெஞ்சு ஜோதிடக்கலைஞரின் கணிப்பு News Lankasri