யாழில் நீதிவேண்டி போராட்டத்தில் ஈடுபட்டோரை கவனிக்காமல் சென்ற இந்திய உயர்ஸ்தானிகர்
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய உயர்ஸ்தானிகர், நீதி வேண்டி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தங்களைச் சந்திக்காமல் சென்றுள்ளமை குறித்து போராட்டத்தில் ஈடுபடுவோர் கவலை வெளியிட்டுள்ளனர்.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் பாரப்படுத்த வேண்டுமென வலியுறுத்தி யாழில் இடம்பெற்றுவரும் சுழற்சி முறையிலான உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 13ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.
நீதி வேண்டிய இந்தப் போராட்டம் நல்லூர் – நல்லை ஆதீனம் முன்பாக யாழ்ப்பாணம் மற்றும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், யாழ்ப்பாணத்துக்கு திடீர் விஜயம் மேற்கொண்டிருந்த இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே, மரியாதை நிமித்தமாக நல்லை ஆதீன குருமுதல்வரைச் சந்தித்திருந்தார்.
குறித்த சந்திப்பினை முடித்துத் திரும்பும் வழியில், உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவோரால் கோசங்கள் எழுப்பப்பட்ட போதிலும் போராட்டத்தில் ஈடுபடுவோரை இந்திய உயர்ஸ்தானிகர் சந்திக்காமலேயே சென்றிருந்தார். இந்நிலையிலேயே, போராட்டத்தில் ஈடுபடுவோர் கவலையை வெளியிட்டுள்ளனர்.


புவிசார் அரசியலை புரிந்து கொள்ள தலைப்படும் தமிழ் தலைமைகள் 14 மணி நேரம் முன்
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam
பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri