அரிசி மாஃபியாவின் முறைகேடான செயற்பாடு: அரசாங்கத்துக்கு விசேட கோரிக்கை
நாட்டில் 04 வகையான அரிசிகளுக்கான விலைக் கட்டுப்பாடுகள் அடுத்த ஆண்டு முதல் கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும் என தேசிய அரிசி கைத்தொழில் சம்மேளனத்தின் அருணகாந்த பண்டார கோரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் அரிசிகளுக்கான விலைக் கட்டுப்பாடு தொடர்பில் கருத்து வெளியிட்டபோதே அவர் இதனை கூறியுள்ளார்.
மேலும் நாட்டில் அரிசி மாஃபியா எவ்வாறு செயல்படுகிறது என்பது தொடர்பில் பின்வருமாறு விளக்கமளித்துள்ளார்.
பிரதான அரிசி ஆலைகள்
“இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை, பிரதான அரிசி ஆலைகள் கீரி சம்பா விலையை உயர்த்துகின்றன.
கீரி சம்பாவின் விலை உயர்ந்தவுடன், அடுத்த பருவத்தில் கீரி சம்பாவை சாகுபடி செய்ய விவசாயிகள் முயற்சி செய்கின்றனர்.
விலை குறைவாக இருக்கும்போதே, ஆலை உரிமையாளர்கள் களஞ்சியசாலைகளை நிரப்பி வைத்துவிடுவர். அப்படி நிரப்பி மிக அதிக விலைக்கு விற்பனை செய்வர்.
அதிகாரிகளின் உதவி
இவ்வாறு முக்கிய ஆலை உரிமையாளர்கள் அதிகாரிகளின் உதவியுடன் நிலைமையின் சமநிலையை உடைக்கிறார்கள்.
எனவே இந்த நிலையில் நாட்டு அரிசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே 04 வகை அரிசிகளுக்கும் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் கட்டுப்பாட்டு விலை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்." என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: சூப்பர் சிங்கர் அரங்கத்தில் கண்ணீரில் மூழ்கிய யாழ்ப்பாண சிறுமி... காரணம் என்ன? Manithan

பிக்பாஸ் 8 நிகழ்ச்சிக்கு பிறகு சீரியல் படப்பிடிப்பு தளத்தில் பவித்ரா ஜனனி... இந்த தொலைக்காட்சி தொடரா? Cineulagam

365 நாட்கள் கொண்ட SBI FD -ல் ரூ.2 லட்சம் முதலீடு செய்தால்.., திரும்ப கிடைக்கும் தொகை எவ்வளவு? News Lankasri
