வீட்டுப் பணிப் பெண் வயதெல்லையை மாற்ற யோசனை - செய்திகளின் தொகுப்பு
இலங்கையில் இனிவரும் காலங்களில் வீட்டுப் பணிப் பெண்களாகத் தொழிலுக்கு அமர்த்தப்படுகின்ற வயதெல்லை 18ஆகத் திருத்தப்படவுள்ளது.
இன்னும் இரண்டு மாதங்களில் குறித்த சட்டத்தைத் திருத்துவதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகத் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவித்துள்ளது.
1956ஆம் இலக்க 47ஆம் சரத்தின் படி, 14 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தொழில்களுக்குச் செல்லும் சந்தர்ப்பம் காணப்பட்டது. எனினும் கடந்த ஜனவரி மாதம் தொழிலுக்குச் செல்வதற்கான வயதெல்லை 16ஆக அதிகரிக்கப்பட்டது.
இதன்படி, 16 வயதுடைய ஒருவரை வேலைக்கு அமர்த்தினாலும், அவரை ஆபத்தான தொழில்களில் ஈடுபடுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய மதிய நேர செய்திகளின் தொகுப்பு,