விடுதலை செய் அல்லது கருணைக் கொலை செய் - பத்திரிகை செய்திகள்
திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தம்மை விடுதலை செய்ய வேண்டும் இல்லையேல், கருணைக் கொலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியே வெள்ளிக்கிழமை மூன்றாவது நாளாகவும் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தமிழக முதலமைச்சருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் இன்றைய தினம் போராட்டக்காரர்களுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தொலைபேசி ஊடாக பேசியுள்ளார்.
இந்த செய்தி தொடர்பான மேலதிக விபரங்களுடனும் மற்றும் பல செய்திகளுடனும் வருகின்றது இன்றைய தினத்திற்கான பத்திரிகை செய்திகளின் காணொளி தொகுப்பு,