மிடில்டன் தோட்ட மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைக்க வேண்டும்:ஜீவன் தொண்டமான்
தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடுகளை உடனடியாக புனரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு இ.தொ.காவின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கோரிக்கை விடுத்துள்ளார்.
தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள தலவாக்கலை, மிடில்டன் தோட்டத்துக்கு இன்று (22.01.2023) அமைச்சர் ஜீவன் தொண்டமான் பார்வையிடச் சென்றுள்ளார்.
இதன்போது, தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ள மக்களை சந்தித்து ஆறுதல் கூறியதுடன், சேத விபரங்களையும் கேட்டறிந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சர் ஜீவன் தொண்டமான் கோரிக்கை
அதேவேளை, இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை செய்யுமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியம் மற்றும் தோட்ட நிர்வாகத்துக்கும் அறிவித்துள்ளார்.
மிடில்டன் தோட்டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 07 வீடுகள் முற்றாக தீக்கிரையாகின. மேலும், 05 வீடுகள் பாரிய சேதமடைந்தன.
இந்த விபத்தில் சுமார் 49 பேர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் உறவினர்கள் மற்றும் பாடசாலையிலும் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பதினாறாவது மே பதினெட்டு 3 நாட்கள் முன்

பேரக்குழந்தைகளுக்கு தோழியாகவே மாறிவிடும் பாட்டிகள் இந்த ராசியினர் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

J-35A போர் விமானங்களை பாகிஸ்தானுக்கு அதிவேகமாக அனுப்பும் சீனா., பாதி விலைக்கு ஒப்பந்தம் News Lankasri

Mahanadhi: நா தான் அவருக்கு பொண்டாட்டி.. வசமாக சிக்கிய விஜய்.. காவேரி எடுத்த அதிரடி முடிவு? Manithan
