யாழில் நள்ளிரவில் நடந்த பயங்கரம் - வன்முறையாக மாறிய குடும்ப தகராறு
யாழ்ப்பாணம், வல்வெட்டித்துறையில் நேற்று நடந்த வன்முறை சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குடும்பத் தகராறு காரணமாக 2 பிள்ளைகளின் தந்தை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வல்வெட்டித்துறை வல்வெட்டியில் நள்ளிரவு 12.30 மணிக்கு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளனர். இதில் 30 வயதான சுப்பிரமணியம் கிருசாந்தன் என்ற 2 பிள்ளைகளின் தந்தையே கொல்லப்பட்டுள்ளார்.
சம்பவத்தில் படுகாயடைந்த அவரை உடனடியாக பருத்தித்துறை ஆதார வைத்தியசாலைக்ககு அழைத்துச் சென்று அனுமதித்த போதும் அவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்தார்.
சம்பவம் தொடர்பில் வல்வெட்டித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.