இலங்கையில் அதி கூடிய தடுப்பூசிகள் நேற்றைய தினம் ஏற்றப்பட்டுள்ளது
இலங்கையில் நேற்றைய தினம் அதி கூடிய கோவிட் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
நேற்றைய தினம் 437,878 கோவிட் தடுப்பூசிகள் இவ்வாறு மக்களுக்கு ஏற்றப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோய்ப் பிரிவு அறிவித்துள்ளது.
சினோபார்ம் தடுப்பூசி முதல் மாத்திரையாக 356,628 பேருக்கு நேற்று தடுப்பூசி ஏற்றப்பட்டதுடன் இரண்டாம் மாத்திரையாக 55,722 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது.
25,240 மொடர்னா தடுப்பூசிகள் ஏற்றப்பட்டதுடன், 108 பைசர் தடுப்பூசிகளும் ஏற்றப்பட்டுள்ளன.
இலங்கையில் இதுவரையில் 78,039,638 பேருக்கு தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதுடன் 1,882,693 பேருக்கு இரண்டு மாத்திரைகளும் ஏற்றப்பட்டுள்ளன.