இலங்கையில் சடுதியாக உயர்ந்த கொரோனா மரணங்கள்!
இலங்கையில் கொரோனா தொற்றுடன் தொடர்புடைய எட்டு மரணங்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, இலங்கையில் கொரோனா மரணங்கள் 240 ஆக உயர்ந்துள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். வெலிகடை சிறைச்சாலையின் 52 வயதhd கைதி, இராஜகிரியாவைச் சேர்ந்த 61 வயதான நபர் ஒருவரும், மட்டக்குளி பகுதியை சேர்ந்த 45 வயதான நபர் ஒருவரும், கொழும்பு 12ஐ சேர்ந்த 36 வயதான பெண் ஒருவரும், கொழும்பு 14ஐ சேர்ந்த 51 வயதான நபர் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளார். அத்துடன், பண்டாரகமவைச் சேர்ந்த 70 வயது பெண்ணும், களுத்துறை தெற்கைச் சேர்ந்த 67 வயது ஆணும், கத்தான்குடியைச் சேர்ந்த 57 வயது ஆணும் உயிரிழந்த எட்டுப் பேரில் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 240 ஆக உயர்வு இலங்கையில் கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 240 ஆக உயர்வடைந்துள்ளது என அரசாங்கத் தகவல் திணைக்களம் சற்று முன்னர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இன்றைய தினம் மேலும் எட்டு கொவிட் மரணங்கள் பற்றிய விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.
1. 52 வயதான வெலிக்கடைச் சிறைச்சாலை ஆண் கைதியொருவர், வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் கடந்த 6ம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
2. ,ராஜகிரிய பிரதேசத்தைச் சேர்ந்த 61 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் கடந்த 7ம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் நீரிழிவு காரணமாக இவர் உயிரிழந்துள்ளார்.
3. மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 45 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த 8ம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவினால் இவர்உயிரிழந்துள்ளார்.
4. கொழும்பு 12 பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் 8ம் திகதி உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் வலிப்பு நோய்களினால இவர் உயிரிழந்துள்ளார்.
5. கொழும்பு 14 பிரதேசத்தைச் சேர்ந்த 51 வயதான ஆண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
6. பண்டாரகம பிரதேசத்தைச் சேர்ந்த 70 வயதான பெண் ஒருவர் ஹோமகம வைத்தியசாலையில் நேற்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் சிறுநீரக நோய்களினால் இவர் உயிரிழந்துள்ளார்.
7. தெற்கு களுத்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 67 வயதான ஆண் ஒருவர் தேசிய தொற்று நோயியல் விஞ்ஞான பிரிவில் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியா மற்றும் இரத்தம் விசமாகியமையினால் இவர் உயிரிழந்துள்ளார்.
8. காத்தான்குடி பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதான ஆண் ஒருவர் வெலிகந்த ஆதார வைத்தியசாலையில் இன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நிமோனியாவினால் இவர் உயிரிழந்துள்ளார்.
சுகாதார சேவைப் பணிப்பாளர் நாயகத்தின் உறுதிப்படுத்தல்களுக்கு அமைய இந்த விபரங்களை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.