வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தலைவி பொலிஸ் விசாரணையில்
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி அவர்களை முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர்.
சர்வதேச மகளிர் தினத்தைக் கறுப்பு நாளாகத் தெரிவித்து முல்லைத்தீவில் நேற்று (08)மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தபேராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த வகையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி அவர்களை முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர்.
தற்போது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
விஜய் - சங்கீதா சேர்ந்து வாழ முடிவு! வதந்திகளுக்கு முற்றுபுள்ளி வைக்கும் எதிர்பாராத திருப்பம் Manithan