வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் தலைவி பொலிஸ் விசாரணையில்
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி அவர்களை முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர்.
சர்வதேச மகளிர் தினத்தைக் கறுப்பு நாளாகத் தெரிவித்து முல்லைத்தீவில் நேற்று (08)மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இந்தபேராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தனர்.
அந்த வகையில் இன்று முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சங்கத் தலைவி மரியசுரேஸ் ஈஸ்வரி அவர்களை முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளுக்காக அழைத்துள்ளனர்.
தற்போது முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
பாக்கியராஜின் மறைவு... குஷ்பு கணவருடன் வெளியிட்ட புகைப்படம்! விளாசிய நெட்டிசனுக்கு குஷ்புவின் பதில் Manithan
50 கிலோ விஷம், 30,000 காப்ஸ்யூல்கள்: 15,000 பேரை கொல்ல சதித்திட்டம்: பயாஸ் பிரேம்ஜி கைது News Lankasri