இரு ஆண்டுகளில் இரண்டு ட்ரில்லியன் ரூபாயை கடனாக பெற்ற அரசாங்கம்
கடந்த 2019 ஆம் ஆண்டு நிறைவுீல் இலங்கை மொத்த கடன் தொகையானது 13 ட்ரில்லியன் ரூபாய் எனவும் 2020 ஆம் ஆண்டில் அந்த தொகை 15 ட்ரில்லியன் ரூபாயாக அதிகரித்துள்ளது எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ச டி சில்வா தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.
இதனடிப்படையில் இரண்டு ஆண்டுகளில் மாத்திரம் தற்போதைய அரசாங்கம் இரண்டு ட்ரில்லியன் ரூபாயை கடனாக பெற்றுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தளவு பெருந்தொகை கடனை பெற்று என்ன செய்தனர் என்பதை காண்பிக்குமாறும் அவர் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.