மைத்திரியை இலக்கு வைத்து தாக்குதலா....! தொடரும் அசம்பாவிதங்களால் குழப்ப நிலை
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பயணித்த காரின் மீது சுங்க சாவடியின் வாயில் கதவு வீழ்ந்தமையினால் சர்ச்சை நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பில், மத்திய அதிவேக வீதியின் குருநாகல் சந்திப்பில் பிரபு பாதுகாப்பு பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கடந்த காலங்களில் இதேபோன்ற சம்பவம் மைத்திரிக்கு இடம்பெற்று நிலையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயரடுக்கு பாதுகாப்புத் துறையின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பாதுகாப்பு அதிகாரி
இரண்டு முறையும் ஒரே அதிகாரி தான் பணம் செலுத்தும் கவுண்டரில் இருந்தாரா அல்லது இந்த சம்பவம் தற்செயலாக நடந்ததா? இது குறித்து விசாரணை நடத்தி வருவதாக உயர் பாதுகாப்பு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று முற்பகல் குருநாகல் மாற்றுப்பாதையில் உள்ள பணப்பரிவர்த்தனை நிலையத்திற்கு அருகில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பயணித்த காரின் மீது வாயில் விழுந்துள்ளது.