உச்ச நீதிமன்றின் பணிகள் வழமைக்கு
உச்ச நீதிமன்றின் பணிகள் இன்று முதல் வழமைக்குத் திரும்புவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சுகாதார அமைச்சின் புதிய சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றி உச்ச நீதிமன்றின் வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கட்டம் கட்டமாக வழக்கு விசாரணைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், குறிப்பிட்ட வழக்கு ஒன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் நேரத்தில் மட்டும் சட்டத்தரணிகள் நீதிமன்றில் முன்னிலையாக அனுமதிக்கப்பட உள்ளது.
விசாரணை செய்யப்படும் வழக்குகள், விசாரணை செய்யும் நீதியரசர்கள் உள்ளிட்ட விபரங்கள் உள்ளடங்கிய பட்டியல் காட்சிப்படுத்தப்பட உள்ளதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற கூடமொன்றில் அதிகபட்சமாக 35 வீதமானவர்களே அனுமதிக்கப்படுவர் என குறிப்பிடப்படுகின்றது.
பொதுமக்கள், கைதிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் நீதிமன்றிற்குள் பிரவேசிக்க அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் நீதியரசர்களின் அனுமதியின் பேரில் மட்டுமே நீதிமன்றிற்குள் பிரவேசிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரியவின் அறிவுறுத்தல்களுக்கு இந்த விபரங்களை வெளியிடுவதாக உச்ச நீதிமன்ற பதிவாளர் பிரதீப் மஹமுத்துகல தெரிவித்துள்ளார்.