மீண்டும் தொடங்கும் ஈரானின் தாக்குதல்கள் : வான்வெளியை தற்காலிகமாக மூடிய குவைத்
ஈரானிய தாக்குதல்களைத் தொடர்ந்து குவைத் தனது வான்வெளியை இன்று (11.06.2026) தற்காலிகமாக மூடியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன் காரணமாக, குவைத்திற்கு வரும் விமானங்கள் மற்ற விமான நிலையங்களுக்குத் திருப்பி விடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமானப்படைத் தளங்களைக் குறிவைத்து
இதற்கிடையில், இன்று அதிகாலையில் குவைத் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க விமானப்படைத் தளங்களைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரானின் புரட்சிகர காவல்படை தெரிவித்துள்ளது.

ஒரு அறிக்கையில், சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து நிலைமைகளை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், பாதுகாப்பு நிலைமை சீரடைந்து, அச்சுறுத்தல்கள் அனைத்தும் அகற்றப்பட்டவுடன் நாட்டின் வான்வெளியை மீண்டும் திறந்து, இயல்பான விமானப் போக்குவரத்துச் செயல்பாடுகளைத் தொடங்கும் என்றும் விமானப் போக்குவரத்து தலைமை இயக்குநரகம் (DGCA) தெரிவித்துள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிராக சலே வழங்கிய உளவுத் தகவல்! அமைக்கப்பட்ட தனிக்குழு தொடர்பில் பொன்சேகாவின் தகவல்