கால் பதித்தது அமெரிக்கா - ராஜபக்ச மும்மூர்த்திகளுக்கே வெளிச்சம்! செய்திகளின் தொகுப்பு
யுகதனவி மின்நிலையத்தை அமெரிக்காவிடம் ஒப்படைப்பதன் மூலம், இலங்கையின் மேற்கு கடற்கரையில் அமெரிக்கா தனது சொந்த கப்பலை நிறுத்துவதற்கான வாய்ப்பை அரசாங்கம் வழங்கியுள்ளது என்று ஜேவிபியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நலிந்த ஜெயதிஸ்ஸ(Nalintha Jayatissa) தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் அமெரிக்கா இந்தப் பிராந்தியத்தில் காலடி எடுத்து வைப்பதற்கு அரசாங்கம் வாய்ப்பளித்துள்ளது என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அனல்மின் நிலையத்தை நிர்மாணிப்பதற்குச் சர்வதேச கேள்வி கோரப்பட்ட போதிலும், அவை அனைத்தும் நீக்கப்பட்டு, New Fortress Energy நிறுவனத் தலைவர் பிரதமர் மகிந்த ராஜபக்சவை(Mahinda Rajapaksa) சந்தித்துத் திட்டத்தைப் பெற்றுக்கொண்டார்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் மேலும் பல செய்திகளை இணைத்து வருகிறது இன்றைய காலை நேர செய்திகளின் தொகுப்பு,