உலகிலேயே கொரோனாவுக்கு எதிராக தயாரிக்கப்பட்ட முதல் மரபணு தடுப்பூசி
சைடஸ் கெடிலா நிறுவனம் தயாரித்துள்ள, சைகோவ் - டி தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு டி.சி.ஜி. எனப்படும் இந்திய மருந்துகள் கட்டுப்பாடு அமைப்பு அங்கீகாரம் அளித்துள்ளது.
12 வயதுக்கு மேற்பட்டோருக்காக சைகோவ் - டி என்ற தடுப்பூசியை, குஜராத்தின் ஆமதாபாத்தை சேர்ந்த சைடஸ் கெடிலா என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
மூன்று டோஸ்களாக செலுத்தப்பட வேண்டிய இந்த தடுப்பூசியின் பரிசோதனை முடிவுகளை இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பிடம் சைடஸ் கெடிலா நிறுவனம் சமர்ப்பித்தது.
அதை அவசர காலத்தில் பயன்படுத்த அனுமதி வழங்கக் கோரி கடந்த மாதம் விண்ணப்பித்திருந்தது.
இந்த நிலையில் அதன் கோரிக்கையை ஏற்று, இந்திய மருந்துகள் கட்டுப்பாட்டு அமைப்பு, சைகோவ் - டி தடுப்பூசியை அவசர காலத்தில் பயன்படுத்துவதற்கு நேற்று ஒப்புதல் அளித்தது.
உலகிலேயே கொரோனா வைரசிற்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ள முதல் மரபணு தடுப்பூசி என்பது குறிப்பிடத்தக்கது.
எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ள 'சிறை' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா? Cineulagam
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri