முதல்முறையாக நெடுஞ்சாலையில் தரையிறக்கப்பட்ட போர் விமானம்!
இந்தியாவில் முதல்முறையாக ராஜஸ்தான், நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு ஓடுபாதையில், மத்திய அமைச்சர்களுடன், போர் விமானம் ஒன்று, தரை இறங்கியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலத்தில், அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை, பல நகரங்களை ஒருங்கிணைக்கிறது. இந்த நெடுஞ்சாலையில், போர் விமானங்களை அவசரமாக தரை இறக்க வசதியாக, 3 கிலோமீட்டர் தூரத்தைக்கொண்ட சிறப்பு ஓடுபாதை உருவாக்கபட்டுள்ளது.
இந்தநிலையில், நெடுஞ்சாலை ஓடுபாதையை, மத்திய இராணுவ அமைசர் ராஜ்நாத் சிங் உட்பட்டவர்கள், ‘ஹெர்குலிஸ் சி -130 ஜே’ போர் விமானத்தில் வந்திறங்கி, நேற்று முறைப்படி ஆரம்பித்து வைத்தனர்.
இந்திய போர் விமானம் ஒன்று, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டுள்ள ஓடுபாதையில், தரை இறங்கியது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது