பொது மக்களை பாதுகாக்கவே புலிகளுடன் போரிட்டோம்! நாடாளுமன்றில் மஹிந்த தெரிவிப்பு
பொதுமக்களை விடுவிக்கும் நோக்கிலேயே இறுதிக் கட்ட போர் முன்னெடுக்கப்பட்டது என பிரதமர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் பிடியில் சிக்கியிருந்த பொதுமக்களை மீட்கும் நோக்கில் போர் புரிந்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்த நிறைவு தொடர்பில் நாடாளுமன்றில் இன்று விசேட உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போதைய எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா உள்ளிட்ட போர்க்கால படைத்தளபதிகள் அனைவரும் வழங்கிய பங்களிப்பினை பிரதமர் மஹிந்த ராஜபக்ச பாராட்டினார்.
படையினர் போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நிராகரிப்பதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.