எம்.ஐ.17வி-5 ஹெலிகொப்டர் விபத்தின் இறுதி தருணம்! - காணொளி வெளியானது
தமிழகம் குன்னூரில் நிகழ்ந்த இராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் இந்திய முப்படைகளின் தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று மதியம் இந்த விபத்து இடம்பெற்றிருந்தது. இதில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஹெலிகொப்டரின் கருப்புப் பெட்டி கிடைத்துள்ளது என்று இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
விபத்து நடந்த இடத்தில் இருந்து கருப்புப் பெட்டி மீட்கப்பட்டதாக இன்று காலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, குறித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாவதற்கு ஒரு சில விநாடிகளுக்கு முன்னர் பதிவான காணொளி ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
அதில் வனப்பகுதியின் மேல் பறந்து செல்லும் ஹெலிகொப்டர் சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளாகியுள்ளமை பதிவாகியுள்ளது.
ஈழத் தமிழர்களின் அரசியல் வெற்றிடமும் வெற்றிக்கான பாதையும் 20 மணி நேரம் முன்
எஞ்சிய ஆறு வெடிகுண்டுகள்... ஈரான் போருக்கு நடுவே ட்ரம்பிற்கு பறந்த அந்த அதிர்ச்சி தகவல் News Lankasri
உலகின் எந்த சக்தியாலும் கொல்ல முடியாத தளபதிகளில் ஒருவர்... மரணத் தண்டனையை நிறைவேற்றிய ஈரான் News Lankasri