பாக்கு நீரிணையை கடக்கும் சாதனைமுயற்சியில் திருகோணமலை இந்துக் கல்லூரி மாணவன்
உலகத்தில் 50 பில்லியன் மக்களிடையே, நீச்சல் மூலம் பாக்கு நீரிணையை கடந்து 06 ஆவது இடத்தினை பெறவேண்டும் என்பதுதான் எனது எதிர்கால இலட்சியம் என திருகோணமலை இந்துக் கல்லூரி மாணவன் ஹரிகரன் தன்வந்த் தெரிவித்துள்ளார்.
ஏதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதி இந்திய தனுஷ்கோடியில் இருந்து நீச்சலை ஆரம்பித்து, மதியம் தலைமன்னார் டியர் என்ற இடத்தில் நீச்சலை நிறைவு செய்ய எதிர்பார்த்துள்ளதாக அவர் கூறியுள்ளார். ஹரிகரன் தன்வந்த் அவர்களது ஊடக சந்திப்பு இன்று யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்றது.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு சுட்டிக்காட்டியுள்ளார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,
விழிப்புணர்வூட்டும் நிகழ்வு
பாக்கு நீரிணையை கடந்து, இளைஞர்கள் மட்டத்தில் அதிகரித்துவரும் போதைவஸ்து பாவனையில் இருந்து மீள்வதற்கான விழிப்புணர்வூட்டும் வகையில் இந்த நீச்சல் காணப்படுகின்றது.
கடற்பரப்பில் வெற்று பிளாஸ்டிக்கழிவுப் பொருட்களை அகற்றி, கடற்பரப்பின் சுத்தமாக வைத்துயிருப்பது விழிப்புணர்வினை ஏற்படுத்தல், உயிர்வாழ் உயிரினங்களில் கடல்வாழ் ஆமைகளை பாதுகாத்தல், முருங்கற் பாறைகளின் முக்கியத்துவத்தின் பேணுதல் தொடர்பாக விழிப்புணர்வு எற்படுத்தும் வகையில் இந்த நீச்சலில் ஈடுபடவுள்ளேன்.
ஈ.சி.டி.திருகோணமலை இந்துக் கல்லூரியில் நான் எட்டாம் தரத்தில் கல்வியினை கற்று வருகின்றேன். கடந்த நான்கு வருடங்களாக நீச்சல் பயிற்சி பெற்றுவருகின்றேன்.” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
