முல்லைத்தீவு -புதுக்குடியிருப்பு பிரதேச மணல் அகழ்விற்கு தற்காலிக தடை
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வசந்தபுரம் பேராற்றினை அண்டிய பகுதியில் இடம்பெற்றுவரும் மணல் அகழ்விற்கு தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.
வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கத்தினால் கடந்த 29.01.2024 அன்று மாவட்ட அரசாங்க அதிபருக்கும் திணைக்கள பிரதிநிதிகளுக்கும் மணல் அகழ்வு தொடர்பில் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த விடையம் கடந்த 16.02.2024 அன்று முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.
அதிகாரிகள் களவிஜயம்
இதன்போது குறித்த பகுதியினை 20.02.2024 அன்று திணைக்கள அதிகாரிகள் களவிஜயம் செய்து பார்வையிட்டு அறிக்கை சமர்ப்பித்து அதற்கான முடிவினை எடுக்கவேண்டும் என முடிவெடுக்கப்பட்டமைக்கு அமைய கடந்த நேற்று கனியவளத்திணைக்களத்தினர்,பிரதேச செயலக அதிகாரிகள்,பொலிஸார் ,நீர்பாசன திணைக்களத்தினர்,கமநலசேவை திணைக்களத்தினர், கிராம அலுவலகர்,சுற்றாடல் அதிகார சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட குழுவினர் மணல் அகழ்விற்கு வழங்கப்பட்ட அனுமதிப்பத்திரங்களுக்கான கள ஆய்வினை வசந்தபுரம் கிராமத்தில் உள்ள பேராற்று பகுதிக்கு சென்று மேற்கொண்டுள்ளார்கள்.
இதன்போது கள ஆய்வினை தொடர்ந்து மாவட்ட மாவட்ட செயலத்தில் மேலதிக அரசாங்க அதிபர் தலைமையில் கூட்டம் நடைபெற்றுள்ளது.
இதில் மணல் அகழ்வு செயற்பாடு மற்றும் அதனால் ஆற்றில் ஏற்படும் பாதிப்புக்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது மேலும், ஆறு ஆழமாக காணப்பட்டுள்ளமையினை கருத்தில் கொள்ளப்பட்டுள்ளதுடன் குறித்த ஆற்றில் மணல் இல்லாத நிலை காணப்படுகின்றது ஆற்றில் போதியளவு மணல் நிரம்பும் வரை வசந்தபுரம் பேராற்று பகுதியில் மணல் அகழ்வு தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பின்னர் ஆவணி மாதத்தில் மீண்டும் ஒரு கள விஜயத்தினை மேற்கொண்டு மணல் அகழ்விற்கான அனுமதி வழங்குவதா இல்லை என்பது தொடர்பில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
சாள்ஸ் நிர்மலநாதன் எதிர்ப்பு
மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் செம்மலை தொடக்கம், கொக்கிளாய் வரையான கடற்கரையோரத்தில் இல்மனைட் அகழ்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.
முல்லைத்தீவு மாவட்ட அபிவி ருத்தி ஒருங்கிணைப்புக் குழுவின் அனுமதி கோரப்பட்ட நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன் இல்மனைட் அகழ்வதற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டிருந்தார்.
இதனை அடுத்து குறித்த அனுமதியை ஒருங்கிணைப்புக் குழு நிராகரிப்பதாகத் தீர்மானித்துள்ளது. முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப் புக் குழுக் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை(16-02-2024) இடம்பெற்றபோதே குறித்த இல்மனைட் அகழ்விற்கான அனுமதி கோரப்பட்டது.
இவ்வாறு செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரையில் இல்மனைட் அகழ்ந்தால் அருகே உள்ள வயல் நிலங்கள் பாதிக்கப்படுவதுடன் செம்மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள உவர் நீர்த் தடுப்பணையும் சேதமடையும் பாரிய இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் வாய்ப்புக்களும் இருப்பதாக இதன்போது சாள்ஸ் நிர்மலநாதனால் சுட்டிக்காட்டப்பட்டது.
மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு அனுமதி வழங்காத விடயத்தை, மத்திய அரசாங்கம் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாதெனவும், செம்மலை தொடக்கம் கொக்கிளாய் வரை இல்மனைட் அகழ் வதற்கு ஒருபோதும் அனு மதிக்க முடியாதெனவும் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஈரானின் எச்சரிக்கை., B-2 பாம்பர் விமானங்களை அனுப்பும் அமெரிக்கா - புதிய கட்டத்திற்கு செல்லும் மோதல் News Lankasri

மகனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்னுடன் காதல் - வருங்கால மருமகளை திருமணம் செய்யும் மாமனார் News Lankasri
