கொழும்பில் மதிய உணவு உட்கொண்ட 33 பேருக்கு நேர்ந்த கதி
கொழும்பு மாவட்டத்திற்குட்பட்ட மீகொட பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றில் இன்று மதிய உணவிற்காக வழங்கப்பட்ட உணவில் ஏற்பட்ட ஒவ்வாமை காரணமாக சுமார் 33 ஊழியர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 20 பேர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையிலும் மேலும் 13 பேர் பாதுக்க மாவட்ட வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 12 பேர் பெண்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
20 - 45 வயதுக்குட்பட்ட பணியாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களது நிலைமை கவலைக்கிடமாக இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் விசாரணை
சுமார் 350 பேர் இந்த ஆடைத் தொழிலில் பணிபுரிகின்றனர், அவர்களில் சிலர் தொழிற்சாலையில் இருந்து மதிய உணவு சாப்பிட்டனர்.
வாந்தி, மயக்கம் மற்றும் தலைவலி காரணமாக அவர்கள் ஆடைத் தொழிற்சாலையின் முதலுதவி பிரிவில் சிகிச்சை பெற்றனர். ஆனால் அங்கு சிகிச்சை போதாததால் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
சில தொழிலாளர்களுக்கு வறட்டு இருமலுடன் தோல் கொப்புளங்களும் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மதிய உணவிற்கான கறிகளில் பருப்பு, முட்டைகோஸ், பீட்ரூட் மற்றும் பொரிந்த மீன்கள் இருந்ததாகவும், மீனை சாப்பிட்டதும் வாய் அரிப்பு, தலைசுற்றல், வாந்தி போன்ற அறிகுறிகள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் வந்து உணவு மாதிரிகளை எடுத்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

கிரிக்கெட் வரலாற்றில் முதல்முறையாக வித்தியாசமான ஆட்டமிழப்பு! கடும் கோபத்தில் இலங்கை வீரர் மெத்தியூஸ்(Photos)





அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri
