தடுத்து வைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கானோரின் முகங்கள் வெளியாகின ! சீனாவுக்கு நெருக்கடி
சீனாவின் சின்ஜியாங்கில் உள்ள மிக இரகசியமான சிறைச்சாலையின் மையத்திலிருந்து ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அத்துடன் தப்பிக்க முயற்சிப்பவர்களை சுட்டுக் கொல்லும் கொள்கையுடன் இந்த சிறைச்சாலைகளில் ஆயிரக்கணக்கானோர் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் புகைப்படங்கள் சீனாவின் பொலிஸ் கணினிகளில் இருந்து ஊடுருவல் மூலம் பெறப்பட்டுள்ளதாக பிபிசி கூறுகிறது.
உய்குர் இன மக்கள் மற்றும் டேர்கிக் இன மக்கள் ஆகியோரே தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
பயங்கரவாதம் உட்பட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

எனினும் இதனை சீன அரசாங்கம், மறுகல்வி மையங்கள் என்று அழைத்து வருகிறது.
ஏற்கனவே சீனாவினால் தடை செய்யப்பட்டுள்ள கலாநிதி எட்ரியன் ஸென்ஸ் என்பவருக்கு ஊடாக இந்த தகவல்களும் புகைப்படங்களும் வெளியாகியுள்ளன.
2017ஆம் ஆண்டு மற்றும் 2018 ஆம் ஆண்டுகளில் இந்த புகைப்படங்கள் கணினிகளில் இருந்து ஊடுருவல் செய்து பெறப்பட்டுள்ளன.
ஊடுருவல் மேற்கொண்டு 2018ஆம் ஆண்டு ஜனவரி மற்றும் ஜூலை 2018 க்கு இடையில் எடுக்கப்பட்ட படங்களில் உய்குர்களின் 5,000 க்கும் மேற்பட்டவர்கள் உள்ளடங்கியுள்ளனர்.
தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் 15வயது சிறுமியும், 77 வயது பெண்ணும் அடங்குகின்றனர்.


மறுகல்வி மையங்கள் என்று சொல்லப்படும் இடங்களில் ஆயுதம் தாங்கிய காவலர்கள் பணிகளில் உள்ளமையானது, அவை கல்வி மையங்கள் அல்ல. சிறைக்கூடங்கள் என்பதை உறுதிப்படுத்துகின்றன.
எனினும் சீன அதிகாரிகள் இந்த குற்றச்சாட்டுக்களை மறுத்து வருகின்றனர்.

இந்தநிலையில் மறுகல்வி மையங்கள் என்பது, மக்கள் தீவிரவாதத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள உதவும் பள்ளிகள் என்று சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யி 2019 இல் கூறியிருந்தார்.

தகவல் ஒன்றின்படி, 2018ஆம் ஆண்டில், 22ஆயிரத்து 762 பேரை கொண்ட இடம் ஒன்றின் 12 வீத வயது வந்தவர்கள் சிறைகளில் அல்லது மறுகல்வி மையங்களில் இருந்தனர் என்பது தெரியவந்துள்ளது.

அத்துடன் 12 லட்சம் உய்குர் இனத்தவர்களும், டேர்கிக் இனத்தவர்களும் சிறைப்படுத்தப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளன. எனினும் அதனையும் சீன அதிகாரிகள் மறுத்து வருகின்றனர்.


ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 23 மணி நேரம் முன்
ஸ்ரீலீலா ஏர்போர்ட்டுக்கு எப்படி வந்திருக்கிறார் பாருங்க.. ஷார்ட் உடையில் பார்பி போல வந்த வீடியோ Cineulagam