சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இலங்கை தமிழ் பெண் கொடூர கொலை! இளைஞர் வெளியிட்ட பரபரப்பு வாக்குமூலம்
சென்னையில் இடம்பெற்ற மோதலில் இலங்கையை சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் வசித்து வந்த 18 வயதான யான்சி என்ற இளம்பெண், நேற்று முன்தினம் (30) சென்னையை சேர்ந்த பெண்ணுடன் கோயம்பேட்டில் உள்ள தனியார் கேளிக்கை விடுதிக்கு சென்றிருந்தபோது ஏற்பட்ட தகராறில் குழுவொன்றினால் காரை வேகமாக ஏற்றிகொலை செய்யப்பட்டிருந்தார்.
7 பேர் கைது
இந்த சம்பவம் தொடர்பாக கோயம்பேடு பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், இந்த வழக்கில் தொடர்புடைய பாலகுரு, அவருடைய நண்பர் சுமன் சக்திவேல் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்கள் விபத்தினை ஏற்படுத்திய காரில் அரசியல் கட்சியொன்றின் கட்சி கொடி கட்டப்பட்டு இருந்துள்ளமையும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், உயிரிழந்த பெண்ணுடன் இருந்த ஆண் நண்பர் ஒருவர் மோதல் தொடர்பில் காணொளியொன்றில் பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார். அவர் தனது காணொளியில்,
நானும், எனது நண்பரும் வாரத்தில் 2 நாட்கள் கோயம்பேடு விடுதிக்கு செல்வது வழக்கம். அங்கு வேலை செய்யும் சிலர் எங்களுக்கு நண்பர்கள் என்பதால் சில நேரங்களில் இலவசமாக சென்று வருவோம்.
ஜோடியாக சென்றால் நுழைவு கட்டணம் இல்லை என்பதால் சம்பவத்தன்று ஆன்லைன் மூலம் இருசக்கர வாகனத்தை பதிவு செய்து அங்கு வந்த யான்சி மற்றும் அவரது 17 வயது தோழி ஆகியோர் தங்களை உள்ளே அழைத்துச் செல்லும்படி கூறியதால் அவர்களை நுழைவு கட்டணம் இல்லாமல் அழைத்துச் சென்றோம்.
வெளியான காரணம்
இதன்போது நடனமாடும் போது, அங்கிருந்த சில இளைஞர்கள், இவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் தகராறு ஏற்பட்டு அனைவரையும் அங்கிருந்த பாதுகாவலர்கள் வெளியேற்றினர்.

இந்த நிலையில் பெண்கள் இருவரும் குடிபோதையில் இருந்ததால் அவர்களை பாதுகாப்பாக அழைத்துச்செல்ல இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டோம். பெண்கள் இருவரும் நடுவில் அமர்ந்து கொண்டனர். அவர்களுக்கு பின்னால் எனது நண்பர் அமர்ந்துகொள்ள ஒரே வண்டியில் 4 பேர் பயணம் செய்தோம்.
இதன்போது மதுபான விடுதிக்குள் ஏற்கனவே தகராறு செய்த நபர்கள், மற்றைய குழுவினர் சென்ற கார் மீது கல்லை வீசிவிட்டு தப்பிச்சென்றுவிட்டனர்.
இதனால் கோபமடைந்த நபர்கள் நாங்கள் தான் கல்லை எறிந்ததாக நினைத்து 7 பேர் கொண்ட கும்பல் கோபத்தில் நாங்கள் சென்ற இருசக்கர வாகனம் மீது வேகமாக வந்து மோதினார்கள்.
முதல் முறை இடித்த போது வாகனம் கீழே விழவில்லை. பின்னர் 2 ஆவதாக வேகமாக வந்து இடித்ததால் 4 பேரும் தூக்கி வீசப்பட்டதில் யான்சி அதே இடத்தில் உயிரிழந்துவிட்டார் என தெரிவித்துள்ளார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புகழ் ஸ்டாலின்-நிரோஷா நடிக்கும் புதிய சீரியல்... வெளிவந்த புரொமோ Cineulagam
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan