முற்றாக முடங்கும் இலங்கை! புதிய அறிவிப்பு வெளியானது
கடந்த ஒரு வாரமாக நாட்டிற்கு எரிபொருள் வரவில்லை, விரைவில் எரிபொருள் கிடைக்கப்பெறாவிட்டால் பொது போக்குவரத்து கூட தடைப்பட்டு நாடு முற்றாக செயலிழந்து போகும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் தற்போது 95 ஒக்டேன் பெட்ரோல் 3000 மெற்றிக் தொன் மாத்திரமே இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
நாடு செயலிழந்து போகும் அபாயம்
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் (CPC) வட்டாரங்களின்படி, பங்கு குறைந்த அளவில் வெளியிடப்பட்டாலும், அது அடுத்த மூன்று நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும்.
இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தில் தற்போது டீசல், சுப்பர் டீசல் மற்றும் 92 ஒக்டேன் பெட்ரோல் இருப்புக்கள் இல்லை என அவர்கள் தெரிவிக்கின்றனர்.
லங்கா ஐஓசியிடம் சுமார் 10,000 மெற்றிக் தொன் டீசல் உள்ளதாகவும், அதில் சில டீசலை அடுத்த சில நாட்களுக்கு இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திடம் ஒப்படைக்க அவர்கள் இணங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
நாட்டில் தற்போது மட்டுப்படுத்தப்பட்ட எரிபொருள்கள் அத்தியாவசிய சேவைகளுக்காக மட்டுமே வழங்கப்படுவதாகவும் எதிர்காலத்தில் டோக்கன் முறையின் ஊடாக எரிபொருளை விநியோகிப்பது சிரமமாக இருக்கும் எனவும் அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு வாரமாக நாட்டிற்கு எரிபொருள் தாங்கி வரவில்லை, விரைவில் எரிபொருள் தாங்கி வராவிட்டால் பொது போக்குவரத்து கூட தடைப்பட்டு நாடு முற்றாக செயலிழந்து போகும் என தெரிவிக்கப்படுகிறது.
நேட்டோ தலைவருடன் சந்திப்பு... பிரித்தானியா உட்பட 8 நாடுகள் மீதான வரியை ரத்து செய்த ட்ரம்ப் News Lankasri
புருஷனா இருக்குறது முக்கியம் இல்ல.. சுந்தர்.சி இயக்கத்தில் விஷால் நடிக்கும் புருஷன் படத்தின் ப்ரோமோ Cineulagam
கணவருடன் ரொமான்டிக் mirror selfie! VJ பிரியங்கா - வசி ஜோடியின் லேட்டஸ்ட் புகைப்படத்தை பாருங்க Manithan
கிரீன்லாந்து விவகாரம்... ட்ரம்பின் இரண்டு அதிரடி அறிவிப்புகள்: குதிக்கும் பங்குச் சந்தை News Lankasri