கொவிட் பரிசோதனையில் மோதல் - வைத்தியசாலையில் ஏற்பட்ட பரபரப்பு
புத்தளம் ஆதார வைத்தியசாலையில் கொவிட் பரிசோதனை மேற்கொள்ளும் போது ஏற்பட்ட கைகலப்பு சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் ஊழியர்கள் இருவரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இச்சந்தேகநபர்கள் நேற்று கொவிட் பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு வந்திருந்தபோது, தமது கைத்தொலைபேசியில் அங்கிருந்த நோயாளர் ஒருவரை படம்பிடிக்க முயன்றுள்ளனர்.
அவ்வேளையில் அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரி அவர்களை தடுக்க முயன்ற போது, இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில், வைத்தியசாலையின் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் காயமடைந்த நிலையில் அதே வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.

புத்திகூர்மையுடன் பிறப்பெடுத்த ராசியினர் இவர்கள் தானாம்... உங்க ராசியும் இருக்கான்னு பாருங்க Manithan

மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட் இயக்கும் புதிய தொடர்... கமிட்டான சூப்பர் புதிய ஜோடி, யார் பாருங்க Cineulagam

கடைசி டெஸ்டில் ஏஞ்சலோ மேத்யூஸ்! நீ உன் தேசத்திற்கு உண்மையான சேவகன் - ரோஹித் ஷர்மா பிரியாவிடை News Lankasri
