பிரதேசசபையின் காணியை கையகப்படுத்த இடமளிக்க முடியாது - வேலணை தவிசாளர் அசோக் காட்டம்
வேலணை பிரதேசசபைக்கு உரித்தான மண்டைதீவு சுற்றுச்சூழல் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்டிருந்த ஒரு தொகுதியான சுமார் 2.5 ஏக்கர் காணியை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் தேவை கருதி கையகப்படுத்த யாழ். மாவட்ட செயலகத்தால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை ஏற்க முடியாதென தெரிவித்துள்ள வேலணை பிரதேசசபை, மத்திய அரசின் தூதுவராக செயற்படும் மாவட்ட செயலகத்தின் இந்த செயற்பாடு உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரத்தை கேள்விக்குள்ளாக்கி இருப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளது.
குறித்த விடயம் தொடர்பில் வேலணை பிரதேசசபைக்கு 15.01.2026ஆம் நாளன்று தீர்மானம் எடுக்கப்பட்டதாக கூறி யாழ். மாவட்ட செயலகத்தால் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்டிருந்த காணி
குறித்த கடிதத்தில், 15.01.2026 ஆம் தியதியன்று மாவட்ட செயலகத்தில் நடத்த கலந்துரையாடலின் பிரகாரம் தங்களுக்கு வழங்கப்பட்ட வேலணை பிரதேச செயலகத்துக்குட்பட்ட மண்டைதீவு கிழக்கு கிராம அலுவலர் பிரிவில் மண்டைதீவு சுற்றுச்சூழல் பூங்காவுக்கென ஒதுக்கப்பட்டிருந்த சுமார் 2.5 ஏக்கர் அரச காணியை இலங்கை கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை கோரி வருவதால் குறித்த காணியில் எதிர்வரும் காலங்களில் எதுவித அபிவிருத்தி நடவடிக்கைதையும் மேற்கொள்ள வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளதாக அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் சபைக்கு தவிசாளர் தெரியப்படுத்தி கருத்துக் கூறுகையில், வேலணை பிரதேசசபையானது ஒரு வருமானம் குறைந்த சபையாக இருக்கின்றது. நாம் சர்வதேச மைதானத்தை வரவேற்கின்றோம். அதே நேரம் எம்மிடம் இருக்கும் வழங்கள் முழுவதையும் கிரிக்கெற் கட்டுப்பாட்டு சபையிடம் கொடுக்க முடியாது.

குறித்த காணி மைதானம் அமையும் சூழலில் இருப்பதால் அக்காணியில் பிரதேசசபை எதிர்காலத்தில் தனக்கான பெரும் வருமானம் ஈட்டும் வளமாக பயன்படுத்த முடியும். இதேநேரம் மைதானத்துக்கு தேவையானளவு காணி ஏற்கனவே ஒதுக்கப்பட்டு வேலைத்திட்டமும் நடைபெறுகின்றது.
தீர்மானம் நிறைவேற்றம்
இந்நிலையில் ஆடம்பர விடுதிகள் மற்றும் பராமரிப்பு குடியிருப்புக்கள் உள்ளிட்ட இதர நோக்கங்களுக்காகவே காணி கோரப்படுகின்றது. ஒரு வருமானம் குறைந்த பிரதேச சபையாக இருக்கும் எமது சபை எதிர்காலத்தில் அந்த நிலப்பரப்பை மையமாக வைத்தே பாரியளவு வருமானத்தை ஏற்படுத்திக் கொள்ள முடியும். எனவே இந்த செயலை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.
இது எமக்குரிய காணி, எதிர்காலத்தில் பிரதேச சபையின் வருமான ஈட்டலுக்குரிய மூலதனமாக இது இருக்கின்றது. எனவே வேலணை பிரதேச சபைக்கு உரித்தான காணி என்பதால் சபையின் எதிர்கால நலன்கருதி எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குறித்த காணியை வேறு ஒருவருக்கு வழங்கும் நிலையில் நாம் இல்லை என்றும் அதை தீர்மானமாக முன்மொழிந்து சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆரம்பமாகும் குருபெயர்ச்சி... 48 நாட்களில் பொற்காலத்தை சந்திக்கும் ராசி யார் யார்னு தெரியுமா? Manithan
உலகக்கிண்ணத்தில் விளையாட மறுக்கும் வங்காளதேசம்.,இணைந்த பாகிஸ்தான்? இலங்கைக்கு மாற்ற கூறும் வீரர் News Lankasri