இடை நிறுத்தியது இலங்கை மத்திய வங்கி! எடுக்கப்பட்டுள்ள முக்கிய முடிவு
தொடர்ந்தும் பணத்தை அச்சிடுவதில்லை என இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. பணத்தை அச்சிடுவதற்கு பதிலாக தேவையான பணத்தை சந்தையில் இருந்து திரட்டுவது என அந்த வங்கி முடிவு செய்துள்ளது.
தற்போதைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்த பின்னர், 1.3 ட்ரில்லியன் ரூபாய் பணம் புதிதாக அச்சிடப்பட்டுள்ளது.
கட்டுப்பாடு இன்றி தொடர்ந்தும் அதிகளவில் பணத்தை அச்சிட்டு வந்தமையே பண வீக்கம் அதிகரிக்க காரணம் என பல தரப்பினர் சுட்டிக்காட்டி இருந்தனர்.
இதனிடையே அடுத்த மாதத்திற்குள் வங்கிகளின் வட்டி வீதங்கள் அதிகரிக்கலாம் என மத்திய வங்கியின் தகவல்கள் கூறுகின்றன.
அரசாங்கம் அண்மையில் அறிவித்த நிவாரணப் பொதியை வழங்க 230 பில்லியன் ரூபாய் தேவைப்படுவதுடன் அந்த பணத்தில் ஒரு தொகை தேசிய பணச் சந்தையில் பெற்றுக்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
