இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு
வீதியை மறித்து போராட்டம் மேற்கொண்டமைக்காக இராஜாங்க அமைச்சர் வியோழேந்திரன் உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு எதிர்வரும் ஜூலை மாதம் 22ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி சீயோன் தேவாலயத்தின் மீது நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலினை நடத்திய குண்டுதாரியின் தலையானது கள்ளியங்காடு இந்து மயானத்தில் புதைத்தது தொடர்பில் மட்டக்களப்பில் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
27-08-2019அன்று இளைஞர்களினால் மட்டக்களப்பு - திருகோணமலை வீதி மறிக்கப்பட்டும் கல்லடி பாலம் மறிக்கப்பட்டும் குறித்த தலையினை புதைத்ததற்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனும் பங்குபற்றியிருந்த நிலையில் குறித்த போராட்டம் நடாத்தியவர்களுக்கு எதிராக மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் தற்போது
நாட்டில் நிலவும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக எதிர்வரும் ஜுலை மாதம் 22ஆம்
திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டதாக இராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்.