களனி ஆற்றில் வீசப்பட்ட சிறுவனின் சடலம் சிலாபத்தில் மீட்பு!
புதிய இணைப்பு
சிறுவனுடைய சடலம் அவரது பாட்டியால் அடையாளம்
கதிரான பாலத்தில் இருந்து தாயாரால் களனி ஆற்றில் வீசப்பட்ட ஐந்து வயது சிறுவனுடைய சடலம் அடையாளம் காணப்பட்டுள்ளது.
சிறுவனின் சடலம் அவரது பாட்டியால் அடையாளம் காணப்பட்டது எனப் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
சிலாபம், வென்னப்பு - வைக்கால் கடற்கரையில் கரையொதுங்கிய நிலையில் சிறுவனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
களனி - கதிரான பாலத்தில் இருந்து கடந்த 15 ஆம் திகதி சிறுவனைக் களனி ஆற்றில் வீசிய சந்தேகநபரான தாய், தானும் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றபோது,பிரதேசவாசிகளால் காப்பாற்றப்பட்டார்.
தாய்க்கு விளக்கமறியல்
சிறுவனின் தாய் வத்தளைப் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஆற்றில் வீசப்பட்ட சிறுவனைக் கண்டுப்பிடிக்க தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், வென்னப்புவ - வைக்கால் கடற்கரையில் இன்று காலை சிறுவன் சடலமாக மீட்கப்பட்டிருந்தான்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வத்தளைப் பொலிஸார் முன்னெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது,
முதலாம் இணைப்பு
கரையொதுங்கியுள்ள சடலம்
சிலாபம், வென்னப்புவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வைக்கால் கடற்கரையில் சிறுவனொருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
இது தொடர்பான தகவலை பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவ வெளியிட்டுள்ளார்.
வத்தளை - கதிரான பாலத்திலிருந்து பெண் ஒருவரினால் களனி ஆற்றில் வீசப்பட்டதாக கூறப்படும் 5 வயது சிறுவனுடையதாக குறித்த சடலம் இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
களனி ஆற்றில் 5 வயது குழந்தையை எறிந்த பெண் வழங்கியுள்ள வாக்குமூலம் |
களனி ஆற்றில் வீசப்பட்ட சிறுவன்
கடந்த 15ஆம் திகதி வத்தளை - ஹெந்தல, கதிரான பாலத்துக்கு அருகில் களனி ஆற்றில் தனது ஐந்து வயது மகனை வீசிவிட்டு, தனது உயிரையும் மாய்த்துக்கொள்ள முற்பட்ட தாயொருவர் பிரதேசவாசிகளால் மடக்கி பிடிக்கப்பட்டிருந்தார்.
தொடர்ந்து இவர் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட் நிலையில் அவர் கைது செய்யப்பட்டு வத்தளை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
களனி ஆற்றில் 5 வயது குழந்தையை வீசிய தாய்! மகன் வழங்கியுள்ள வாக்குமூலம் |
இந்த நிலையில் அவரை எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
இதேவேளை, ஆற்றில் வீசப்பட்ட சிறுவனை கண்டுபிடிக்க தொடர்ச்சியாக தேடுதல் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.